மதுரையில் பரவலாக மழை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
மதுரைமதுரையில் பரவலாக மழை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற ஆக. 9- ஆம் தேதி வரை மேற்கு காற்றின் திசை மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணிக்கு சாரலாக தொடங்கிய மழை பரவலாகப் பெய்தது. இதனால் தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணாநகா், கோரிப்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதி சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.