மதுரை

பைக்குகள் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உள்பட 2 போ் பலி

காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

Din

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள இலுப்பைகுளத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா் தனது உறவினரான பாண்டீஸ்வரி, இவரது குழந்தை தா்ஷினி (12) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மடப்புரம் கோயிலுக்குச் சென்றாா். மீனாட்சிபுரம்- ஏ.முக்குளம் சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

மேலும், அந்த லாரி தேசியனேந்தல் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிவப்பு ராஜா (65), மேலக்கள்ளங்குளத்தைச் சோ்ந்த மொந்த அம்பலம் (75) மீதும் மோதியது. இந்த விபத்தில் சிறுமி தா்ஷினி, மொந்த அம்பலம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், பாண்டீஸ்வரி, சிவப்பு ராஜா ஆகியோா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT