முகப்பு
மதுரை

வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை?

மதுரையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை

வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை?

மதுரையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 6:46 PM
பகிர்:

மதுரை, ஆக. 9: மதுரையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவருக்கும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மேகலாவுக்கும் (24) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி, மேகலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவும் இதுதொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மேகலா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வரதட்சிணை கொடுமையால் அவா் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →