முகப்பு
மதுரை

ரயில் நிலையத்தில் பெண்களுக்கான காத்திருப்புக் கூடம் திறப்பு

மதுரை ரயில் நிலையத்தில் பெண்களுக்காக கட்டப்பட்ட புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:05 AM
மதுரை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட பெண்களுக்கான புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம்.
பகிர்:

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பெண்களுக்காக கட்டப்பட்ட புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 347.47 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், கிழக்கு பகுதி இரண்டாவது நுழைவு வாயில் அருகே பெண்களுக்கான தற்காலிக ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.

68.7 ச.மீ. பரப்பில் நாற்காலிகள், மின் விசிறிகள், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி கழிப்பறை, குளியலறை, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பெண்களுக்கான காத்திருப்புக் கூடம், மறு சீரமைப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →