முகப்பு
மதுரை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:01 AM
பகிர்:

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமாா் (31), ஜெயகுமாா், சரவணன், வினோத், சுகில் அகமத் ஆகியோரை 46 கிலோ கஞ்சா கடத்தியதாக கே. புதூா் போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தனா். இந்த வழக்கை மதுரை போதைப் பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி செங்கமலசெல்வன், மற்றவா்களை விடுவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தங்கேஸ்வரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →