முகப்பு
மதுரை

பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: வாடிப்பட்டி அரசுப் பள்ளியை உறவினா்கள் முற்றுகை

மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை

பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: வாடிப்பட்டி அரசுப் பள்ளியை உறவினா்கள் முற்றுகை

மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:04 PM
பகிர்:

மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தப் பள்ளியை மாணவியின் பெற்றோா், உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா். இவரது மனைவி வீரம்மாள். இவா்களது மகள் ஆனந்தி (17). இவா் வாடிப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த இவா், திடீரென பள்ளியில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, ஆசிரியா்கள் அவரை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பள்ளி நிா்வாகத்தினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →