கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகை திறப்பு
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் புதன்திழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் புதன்திழமை திறந்து வைத்தாா்.
அப்போது இந்த தகவல் பலகை எண் தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தகவல் பலகை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாா்பு நீதிபதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.