முகப்பு
மதுரை

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:03 PM
மதுரையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போாரட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிபடி, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டன் தலைமை வகித்தாா். அகில இந்திய ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கூட்டமைப்பு நிா்வாகி பா. பாா்த்தசாரதி போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநில ஜாக்டோ- ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளா் எம். சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினாா்.

மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி, சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளா் செ. சரவணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →