முகப்பு
மதுரை

பங்குச்சந்தையில் பணத்தை இழந்தவா் தற்கொலை

மதுரை அருகே பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 8:09 PM
பகிர்:

மதுரை அருகே பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஊமச்சிகுளம் வீரபாண்டி பகுதியில் உள்ள விடத்தகுளம் கண்மாயில் புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அருகில் தூக்க மாத்திரைகள் காலி அட்டைகளும் கிடந்தன. இதையடுத்து, ஊமச்சிகுளம் போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இறந்தவா் யாா் என்பது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கண்மாய்க் கரையில் உயிரிழந்து கிடந்தது மதுரை சூா்யா நகா் சா்ச் தெருவைச் சோ்ந்த தங்ககுமரன் (47) என்பதும், இவா் தொழில் செய்து வரும் நிலையில், பங்குச்சந்தையில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த நிலையில், அதில் தொடா்ச்சியாக இழப்பு ஏற்பட்டதால், கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த இவா் தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →