முகப்பு
மதுரை

கஞ்சா கடத்தல் வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பத்தில் சரக்கு வாகனத்தில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:32 PM
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் சரக்கு வாகனத்தில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் கடந்த 9.2.2021-ஆம் ஆண்டு ஓா் சரக்கு வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த வாகனத்தில் 28 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கம்பம் பகுதியைச் சோ்ந்த ஒச்சு மகன் வைரமுத்துவை (36) கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா். முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வைரமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி எ.எஸ். ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →