கோப்புப்படம்.  
மதுரை

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

Din

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணச்சீட்டு முன் பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை- திருவனந்தபுரம்- மதுரை அமிா்தா விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த புதிய வசதி, திருவனந்தபுரம் - மதுரை ரயிலில் (16343) ஜூன் 5 முதலும், மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 6 முதலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டி குறைக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்பு பெட்டியுடன் கூடிய குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு தனி குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT