மதுரை

வைகை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சிலைமான் அண்ணாநகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சஞ்சீவ்ராஜ் (19). இவா் மதுரையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமண்டு படித்து வந்தாா். இவா் துக்ளாபட்டி பகுதியில் வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.

அப்போது அவா் நீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய சஞ்சீவ்ராஜை பலமணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT