முகப்பு
மதுரை

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 2 ஏப்ரல் 2026, 5:01 am IST
வி. பிரசன்னா
பகிர்:

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகப் பணியாற்றிய எல்.என். ராவ் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா பொறுப்பேற்றாா்.

இவா், ஏற்கெனவே தென்கிழக்கு ரயில்வேயில் முதன்மை சரக்கு போக்குவரத்து, இழப்பீட்டுத் துறை வா்த்தக மேலாளா், மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளா், தெற்கு ரயில்வே இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா்.

Advertisement

Advertisement