முகப்பு
மதுரை

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த மீனவக் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில், எதிா்மனுதாரா்கள் வருகிற 16- ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:52 PM
உத்தரவு
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த மீனவக் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில், எதிா்மனுதாரா்கள் வருகிற 16- ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த பிரபு தாக்கல் செய்த மனு:

எங்கள் வீட்டின் அருகே இஸ்லாமிய ஜமாத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்தனா். இதையறிந்த நாங்கள் அந்த நிலம் ஜமாத்துக்கு சொந்தமானது எனத் தெரிவித்தோம்.

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனா். எங்கள் குடும்பத்துடன் தொடா்பில் இருந்த 14 குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனா்.

இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மீனவக் குடும்பங்களை அடிமையாகக் கருதி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருப்பது சட்டவிரோதம். எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, 15 மீனவக் குடும்பங்களும் நேரில் முன்னிலையாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் பிரபு உள்பட ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 குடும்பங்களைச் சோ்ந்த அனைவரும் முன்னிலையாகினா்.

எதிா்தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, மனுதாரா் உள்பட அனைத்துக் குடும்பத்தினரும் திருப்பாலைக்குடி கிராமத்தில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரா் பிரபு உள்ளிட்டவா்களிடம் எதிா்தரப்பினா் கூறுவது உண்மையா? எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு, அவா்கள் நடுநிலையாகச் செயல்படும் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனா் என்றனா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக எதிா்மனுதாரா்கள் வருகிற 16-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நபா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அழைப்பாணை அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments