முகப்பு
மதுரை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 6 மார்ச், 2026 at 3:30 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 10:03 PM

மதுரையை அடுத்த பரவையில் உள்ள மங்கையா்கரசி கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் சங்கம் ஆகியவை சாா்பில், இந்தப் பேரணி நடைபெற்றது. சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா்.

கல்லூரிச் செயலா் அசோக்குமாா், இயக்குநா் சக்தி பிரனேஷ், இணை இயக்குநா் சரவண பிரதீப்குமாா், முதல்வா் உமா பாஸ்கா், கல்விப் புலத் தலைவா் செந்தூா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

கல்லூரி மாணவிகள், சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். சமயநல்லூா் முதல் பரவை வரை இந்தப் பேரணி நடைபெற்றது.