ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்-ஆட்சியராக பி.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பரமக்குடி பொறுப்பு கோட்டாட்சியராக அமிர்தலிங்கம் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார். இப் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பி.விஷ்ணுசந்திரன் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக்கொண்டார். பி.டெக். பொறியியல் பட்டம் படித்த இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் சார்- ஆட்சியருக்கான பயிற்சி பெற்று வந்த நிலையில் பரமக்குடி சார்- ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.