ராமநாதபுரம்

பரமக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

DIN

பரமக்குடி அருகே சனிக்கிழமை வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.
அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் கோவிந்தன் (70). விவசாயியான இவர், ஊர் அருகே பூங்கா நகர் காலனி பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குச் செல்வதற்காக வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மின்வயரை மிதித்துவிட்டார். இதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் அவரது மகன் குணசேகரன் (48) அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT