தேசிய திறனாய்வுத் தேர்வு: அக்காள், தம்பி வெற்றி
மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமேசுவரம் புதுரோடு மீனவ கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆ.சிநேகா மற்றும் மாணவர் சு.சாரங்கன். இருவரும் அக்காள், தம்பி ஆவர். இந்த இருவரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இருவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.சார்லஸ் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கி.ஜெரோம், மு.ஜலிலா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.