ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்  நகை, பணம் திருட்டு

DIN

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்துள்ள பெருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்பஷீர்(21). இவர் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு ஞாயிற்றுகிழமை காலை திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சில்வர் பாத்திரம், 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்  சென்றது தெரிய வந்தது. இது குறித்து அப்துல் பஷீர் அளித்த புகாரின் பேரில் உச்சிப்பளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிராஜூதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT