முதுகுளத்தூர் அருகே இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
முதுகுளத்தூர் அருகே எம்.கடம்பன்குளத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
முதுகுளத்தூர் அருகே எம்.கடம்பன்குளத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி கடந்த 2014- 15 ஆம் ஆண்டு ரூ.22 ஆயிரம் செலவில் மராமத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் அபாயத்தில் உள்ளது. எனவே இக்குடிநீர் தொட்டியை மராமத்து செய்ய அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.