ராமநாதபுரம்

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய இளைஞர் கைது 

DIN

ராமநாதபுரத்தில்  ஜவுளிக்கடை ஊழியரைத்  தாக்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிந்த போலீஸார், அதில் இளைஞர் ஒருவரை மட்டும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 
ராமநாதபுரம் நகர் புலிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை இரவு அவர் பேராவூர் பகுதியில் பொந்தம்புளி மரத் தெருவிற்குச் சென்றுள்ளார்.  அப்போது அவரை வழிமறித்த கும்பல், அடிக்கடி ஏன் இப்பகுதி வழியாக வருகிறாய் எனக்கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். 
இதுதொடர்பாக புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் 7 பேர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த அஜீத் (20) என்பவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT