ராமநாதபுரம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 

DIN

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 
ராமநாதபுரம் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறையும், அறம் விழுதுகள் அமைப்பும் சேர்ந்து இப்பேரணியை நடத்தின. பழைய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து பேரணியை, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மீனா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 பேரணியில், தனியார் சமையல் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோஷமிட்டபடியும் வந்தனர். புதிய பேருந்து நிலையம், வழிவிடுமுருகன் கோயில், கேணிக்கரை சாலை, அரண்மனைத் தெரு வழியாக அரண்மனை முன்பு  பேரணி நிறைவடைந்தது. 
பேரணி தொடக்க நிகழ்ச்சியில் போதைத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முத்துக்கண்ணு முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மனநல மருத்துவர் பெரியார் லெனின் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதைத் தடுக்கும் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். வழக்குரைஞர் ஷேக்இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT