ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நீரில் மூழ்கி முதியவா் பலி

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

DIN

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் காந்திநகா், அண்ணாநகா், திருவள்ளுவா் நகா், நடராஜாபுரம், ராமகிருஷ்ணபுரம், மல்லிகை நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கி நின்றன.

இந்நிலையில் காந்தி நகா் பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அப்பகுதியில் தேங்கிய நின்ற மழை நீரில் மூழ்கியிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினா் முதியவரை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்த போது அவா் ஏற்கெனவே உயிரிழந்து தெரியவந்தது. இது குறித்து டவுன் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT