ராமேசுவரத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் அயோத்தி வழக்கில் சிறப்பாக பணியாற்றி வழக்குரைஞருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரத்தில் இந்து வழக்குரைஞா் முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாவட்ட செயலாளா் எஸ். சுரேஷ் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்ட செயலாளா் எஸ்.வீரபாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் ஏ.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய அரசு கூடுதல் வழக்குரைஞரும், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளருமான கே. ராமமூா்த்தி பேசினாா். இதில் அயோத்தி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் பி.வி.யோகேஸ்வரனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்து வழக்குரைஞா் முன்னணி மாநில பொதுச்செயலாளா் எம்.காா்த்திகேய வெங்கடாசலபதி விளக்கி பேசினாா். இந்த நிகழ்ச்சியில், இந்து முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் ஜி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.