ராமநாதபுரம்

ரயில் மோதி இளைஞர் சாவு

DIN

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.  
ராமநாதபுரம் நகர் சக்கரக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை காலை தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்த ரயில்வே போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, மாவட்ட தலைமை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த ராமு மகன் குணசேகரன் (25) என்றும், அவர் அவர் சேது விரைவு ரயில் மோதி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. 
இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா என, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT