ராமநாதபுரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது என, ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை மட்டும் விவாதிக்க வேண்டும். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.