ராமநாதபுரம்

கடலாடி அருகே மர்மக் காய்ச்சல்: பிளஸ் 2 மாணவர் சாவு

கடலாடி வட்டம் சிக்கல் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்  புதன்கிழமை உயிரிழந்தார்.

DIN


கடலாடி வட்டம் சிக்கல் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்  புதன்கிழமை உயிரிழந்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அருகே உள்ள சித்துடையான் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சாயல்குடி, கடலாடி, ராமநாதபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 இதில் செல்வராஜ் மகன் ஹரீஸ்குமார் (17)  கடந்த திங்கள் கிழமை பிளஸ் 2 தேர்வு எழுதிய பின்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  ராமநாதபுரம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இது குறித்து மருத்துவர் சரவணன் கூறியது: காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்த ஹரீஸ்குமாரின் முழு மருத்து அறிக்கை வந்த பின்புதான் என்ன காய்ச்சல் என்பது தெரியவரும். கடந்த 3 நாள்களாக சித்துடையான் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT