ராமநாதபுரம்

இளம்பெண் தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து 7 நாள்களாக உறவினர்கள் போராட்டம்

DIN


கமுதி அருகே தற்கொலை செய்த இளம் பெண் வழக்கை கொலை வழக்காக பதிந்த பின்னரும் 7 நாள்களாக உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள டி.வல்லக்குளத்தில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இளம்பெண் ராதிகா(22) என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து அபிராமம் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், இதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும், கொலைக்குக் காரணமானவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி,  பிரேத பரிசோதனை செய்த ராதிகாவின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இவ் வழக்கை, போலீஸார் சனிக்கிழமை கொலை வழக்காகப்  பதிவு செய்தனர். இந்நிலையில், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவும், உரிய இழப்பீடு வழங்கú வண்டும் எனக் கோரியும், கடந்த  7 நாள்களாக ராதிகாவின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். 
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளிப்பதற்காக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம்  சென்றனர். இதற்கிடையில், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், ரூ. 5 லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டும், இல்லாவிடில்,  மகள் சடலத்தைப் பெறமாட்டோம் என ராதிகாவின் தாயார் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கமுதி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறியது: ராதிகாவின் தாயார் கஸ்தூரி தனது மகளின் சடலத்தைப் பெற்று கொள்வதாக, அபிராமம் போலீஸில் ஞாயிற்றுக்கிழமை உறுதிமொழி அளித்துள்ளார். ராதிகாவின் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கியவுடன், பிரேத பரிசோதனை செய்த ராதிகாவின் உடல், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். 
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT