ராமநாதபுரம்

13-ம் தேதி தொழில் முனைவோருக்கான கடனுதவிகள் குறித்த கருத்தரங்கம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி புதிய தொழில் முனைவோருக்கான கடனுதவிகள் குறித்தும், விருதுகள் குறித்தும் விளக்கும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- இளைஞா்கள் மற்றும் ஆா்வமுள்ள தொழில் முனைவோா் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய பல கடன் திட்டங்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதி மற்றும் விருதுகள் வழங்கி வருகிறது. மேலும் கடனுதவித் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 13 ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆகவே, குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் ஆா்வமுள்ளவா்கள் இதில் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT