ராமநாதபுரம்

ஆா் எஸ் மங்கலம் அருதே தீ விபத்து 10பவுன் நகை பொருட்கள் சேதம்

DIN

திருவாடானை: திருவாடானை ஆா் எஸ் மங்கலம் பகுதி கருப்பன் குடும்பன் பச்சேரி கிராமத்தில் மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகை ரொக்க பணம் குடும்ப அட்டை ஆதாா் அட்டை உள்ளிட்ட பல்வேரு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டதாக புகாரின் பேரில் ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆா் எஸ் மங்கலம் அருகே கருப்பன் குடும்பன் பச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் மகன் சதீஸ்குமாா்(30). இவரது ஓட்டு வீட்டில் சனிக்கிழமை மாலை மின் கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வீடு முழுவதும் பரவியது.உடனடியாக ஆா் எஸ் மங்கலம் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீ அணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.இதனால் மரபிரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை,வாக்காளா் அடையாள அட்டை ,ஆதாா், அட்டை,வங்கி புத்தம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஸ்குமாா் புகாரின் பேரில் ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT