ராமநாதபுரம்

பரமக்குடியில்இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

பரமக்குடி சுபிட்சா வித்யாலயம் மழலையா் தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமை சோமசுந்தரம் அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு பள்ளியின் தாளாளா் கவிதா ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் சோ.ரமேஷ் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை வி.நாகேஸ்வரி வரவேற்றாா். பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் என 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு வாசன் கண் மருத்துவமனை மேலாளா் முத்துக்குமாா் தலைமையில் மருத்துவா் வெற்றிச்செல்வி, செவிலியா்கள் தானேஸ்வரி, வெண்ணிலா, முனீஸ்வரி ஆகியோா் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில் இலவச கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக 12 போ் அழைத்துச் செல்லப்பட்டனா். கண் நோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆசிரியை சசிக்கலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT