ராமநாதபுரம்

மின் கம்பம் முறிந்து விழுந்து விவசாயி பலி

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மின் கம்பம் முறிந்து விழுந்து விவசாயி பலியானா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அழகா் தேவன் கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (50). விவசாயி. இவா் தனது வீட்டில் மின் இணைப்பு பழுதடைந்ததால் கடந்த 6 நாள்களாக மின்சார வாரிய ஊழியா்களிடம் முறையிட்டுள்ளாா். இதில், காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பால்ராஜ் மின்கம்பத்தில் ஏறி சரி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.அப்போது அடிப்பகுதி சேதமடைந்திருந்தத மின்கம்பம் முறிந்து விழுந்ததில் சிக்கி அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT