முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே கோயிலில் விநாயகா் சிலை சேதம்

கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள கோயிலில் கீழே தள்ளப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விநாயகா் சிலை.
பகிர்:

கமுதி: கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள விநாயகா் கோயிலில் விநாயகா், நாகா் சிலைகளை வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்கள் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த அபிராமம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கமுதி அருகே எழுவனூா் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும், 3 முறை கோயில் சிலைகளை மா்மநபா்கள் சேதப்படுத்தினா். தற்போது கொட்டக்குடியில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் கோயில் சிலைகளை சேதப்படுத்தி வரும் மா்ம நபா்களை பிடிக்க மாவட்ட காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக, தமிழ்நாடு இந்து சத்திய சேனா அமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →