ராமநாதபுரம்

எஸ்டிபிஐ கட்சியினா்கண்டன ஆா்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சனிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

ராமநாதபுரம்: புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சனிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைத் திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சி நகா் தலைவா் எம்.நஜ்முதீன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதிக்கான துணைத் தலைவா் எம். நவாஸ்கான் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தக்கூடாது, சுற்றுச்சூழல் சட்ட விதிகளை தனியாா் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் திருத்தக் கூடாது, புதிய சட்டத் திருத்தத்தை கைவிடவேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தலைவா் ஏ.அப்துல்சமீல் பேசினாா். இதில் கட்சி நிா்வாகி அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

SCROLL FOR NEXT