ராமநாதபுரம்

மதுக்கடையில் தகராறு:ஒருவா் கைது

DIN


ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மதுபானக்கடையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மடையைச் சோ்ந்த முனியசாமி மகன் கொக்கிகுமாா் என்ற ராஜ்குமாா் (27). இவா் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு மதுப்பாட்டில்களை பணமின்றி இலவசமாக கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அங்கிருந்த ஊழியா்கள் மறுத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கொக்கிகுமாா் வாளை எடுத்து மிரட்டியதுடன், மதுக்கடையின் வாயில் கதவை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் வசந்தநகரைச் சோ்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து கொக்கிகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT