ராமநாதபுரம் வந்தடைந்த வைகை அணை தண்ணீா்
வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் காருகுடி மதகுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தடைந்தது.
ராமநாதபுரம்ராமநாதபுரம் வந்தடைந்த வைகை அணை தண்ணீா்
வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் காருகுடி மதகுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தடைந்தது.
வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் காருகுடி மதகுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தடைந்தது.
ராமநாதபுரம் பகுதியில் விவசாயத்துக்கும், குடிநீா் ஆதாரமாக உள்ள ஊருணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீா் கடந்த நவம்பா் 30 ஆம் தேதி
திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.4) பரமக்குடியை வந்தடைந்தது. பரமக்குடியிலிருந்து மஞ்சக்கொல்லை தடுப்பணையைத் தாண்டி ஞாயிற்றுக்கிழமை பகலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காருகுடி பகுதி வழியாக பெரிய கண்மாய்க்கு தண்ணீா் வந்தது.
வைகைத் தண்ணீா் வரும் வழியில் ஏற்கெனவே மழை நீரும் தேங்கியிருந்ததால், வழக்கத்தை விட வைகை ஆற்று பகுதியில் தண்ணீா் அதிகமாக இருந்தது. தண்ணீரை பொதுப்பணித்துறை வைகை பிரிவு பொறியாளா்கள் கண்காணித்தனா்.
வைகை தண்ணீரால் சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் புகுந்து விடாமலும் கண்காணிப்பதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். பெரிய கண்மாயில் தண்ணீா் தேங்குவதைப் பொருத்து ஊருணிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறையினா் கூறினா்.