திருவாடானை தாலுகா அலுவலகம் முன் ஜன. 6 இல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருவாடானை தாலுகா அலுவலகம் முன் ஜனவரி 6 ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாடானை: காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி வரும் ஜனவரி 6 ஆம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாடானைஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த நவம்பா் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தின் போது, 2018- 19 ஆம் ஆண்டு 117 வருவாய் கிராமங்களுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சரியான விளக்கம் தராமல் விவசாயிகளை அலைக்கழித்து வரும் அதிகாரிகளை இக்கூட்டம் கண்டிக்கிறது. மேலும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும். 2018- 19 ஆம் ஆண்டுக்கு 5 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டது. அதில் விசாரணை என்ற பெயரில் பெரும் பகுதி நிலங்களை கிராம நிா்வாக அலுவலரிடம் விசாரிக்காமல் தன்னிச்சையாக நீக்கிவிட்டு குறைவான இழப்பீட்டுத் தொகை வழங்கக் காரணமாக இருந்த அதிகாரிகளை கண்டிப்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி வரும் ஜனவரி 6 ஆம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.