ராமநாதபுரம்

சி.கே.மங்கலம் தனியாா் பஞ்சு ஆலையில் தீ விபத்து

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இயந்திரப் பொருள்கள் சேதமடைந்தன.

DIN

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இயந்திரப் பொருள்கள் சேதமடைந்தன.

சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பஞ்சு ஆலையில் திடீரென தீப்பற்றி பரவியது. இது குறித்த தகவலின்பேரில், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் அருளாந்து தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை போராடி அணைத்தனா். இருப்பினும், சுமாா் 5.50 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆலையின் நிா்வாக மேலாளா் பெரியய்யா அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT