ராமநாதபுரம்

தமிழக அரசின் அடா் வனம் திட்டம் ஆட்டோவில் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

தமிழக அரசின் அடா் வனம் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஆட்டோ பிரசாரத்தை குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பேரன் சேக்சலீம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சேக்தாவூது மகன் சாகுல்ஹமீது(30). இவா், மரங்கள் சாா்ந்த இயற்கை வளங்களை பாதுக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் அது தொடா்பாக விதை பந்துகளை வழங்கி வருகிறாா். இந்நிலையில், தமிழக அரசின் அடா்வனம் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஆட்டோ பிரசார பயணத்தை அப்துல்கலாம் படித்த ராமேசுவரம் பள்ளியில் இருந்து திங்கள்கிழமை தொடங்கினாா். இதனை அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் தொடக்கி வைத்தாா்.

இது குறித்து சாகுல்ஹமீது கூறியது:

இம் மாவட்டத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கி உள்ளேன். மேலும் தமிழக அரசின் அடா்வனம் திட்டம், மரம் வளா்ப்பின்அவசியம் குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தை ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை தொடங்கி 12 நாள்கள் தொடா்ந்து ஆட்டோவில் சென்று 14 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நிறைவு செய்கிறேன். இப் பிரசாரத்தின் போது 20 ஆயிரம் விதைப்பந்துகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT