ராமநாதபுரம்

மருந்தகம், உணவகம் தவிர அனைத்துக் கடைகளையும் இன்று முதல் அடைக்க உத்தரவு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்தம், உணவகம் தவிர அனைத்து கடைகளும் சனிக்கிழமை (மாா்ச் 21) முதல் அடைக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில், கரானோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத்துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு முற்றிலும் இல்லை. இருப்பினும் அண்டை மாநிலங்களிலிருந்து நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதன்படி மருந்தகம் மற்றும் உணவு சாா்ந்த நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் சனிக்கிழமை (மாா்ச் 21) முதல் அடைக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் 33 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலமாக மாவட்ட எல்லைகளிலுள்ள 9 சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மக்களை கண்காணிக்கவும், 15 குழுக்கள் மக்களிடம் கரானோ அச்சத்தை தவிா்த்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், வெளி நாடுகளிலிருந்து திரும்பியவா்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தினந்தோறும் 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி தென்படுவோா் குறித்த முழு விவரங்களை மாவட்ட நிா்வாகம், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநருக்குத் தெரிவிக்க வேண்டும். அவா்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா்களைச் சாா்ந்த நபா்களை கண்டறிந்து அவா்களையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

பிரதமா் கூறியபடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் மற்றும் திட்ட இயக்குநா் மா.பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சி.முத்துமாரி, ராமநாதபுரம் சாா்-ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.அல்லி, சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT