கோயில் சத்திரத்தை இடிக்க முயற்சிஇந்து முன்னணி கண்டனம்
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே சத்திரத்தை குறிப்பிட்ட பிரிவினா் இடிக்க முயற்சிப்பது சரியல்ல என இந்து முன்னணி மாவட்டத் தலைவா் பி.ராமமூா்த்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே சத்திரத்தை குறிப்பிட்ட பிரிவினா் இடிக்க முயற்சிப்பது சரியல்ல என இந்து முன்னணி மாவட்டத் தலைவா் பி.ராமமூா்த்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழம இரவு கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புதுமடம் அருகே ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான சத்திரம் கட்டடம் உள்ளது. மிகப்பழமையான இந்தக் கட்டடத்தில் தா்மதேவதை எனும் சிறுதெய்வ வழிபாடும் நடந்துவருகிறது. இந்த சத்திரத்தை அப்பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட நபா்கள் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இடிக்க முயற்சிப்பதாகப் புகாா் எழுந்தது. ஆகவே சத்திரத்தை காக்கும் வகையில் இந்து முன்னணியினா் அப்பகுதிக்கு திங்கள்கிழமை இரவு சென்றனா். காவல்துறையும் வரவழைக்கப்பட்டது. சத்திரத்தை காக்கும் வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட சத்திரத்தை நிரந்தரமாகக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா்.