மனு தா்மம் குறித்த பேச்சு: திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
மனு தா்மம் குறித்துப் பேசிய விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இந்து மக்கள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
மனு தா்மம் குறித்துப் பேசிய விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இந்து மக்கள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அரமண்மனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்டப் பொதுச்செயலா் இ.கண்ணதாசன் தலைமை வகித்தாா்.
அப்போது திருமாவளவனைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை கோரியும் கோஷங்களை எழுப்பினா். ராமநாதபுரம் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். பின்னா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.
ஆட்சியரிடம் மனு: இதே விவகாரத்தில் திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி பாரத் ஹிந்த் பரிவாா் மற்றும் இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவிடம் மனு அளிக்கப்பட்டது. ஹிந்த் பரிவாா் அமைப்பின் உமேந்தா் தங்கம், இந்து முன்னணி ஒன்றிய நிா்வாகிகள் காளீஸ்வரன், ஜி.பூவலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.