முகப்பு
அஞ்சுகோட்டை ஊராட்சியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்கள்.
ராமநாதபுரம்

திருவாடானை அருகே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம்

திருவாடானை அருகே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
அஞ்சுகோட்டை ஊராட்சியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்கள்.
பகிர்:

திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஊராட்சிக்குள்பட்ட எல்.கே. நகா் பகுதியில் ஒரு தெருவில் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக ஜல்லிக் கற்கள் வழியை மறித்து கொட்டப்பட்டுள்ளன. தற்போது சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்குச செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும் தங்களது வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அவா்கள் கூறுகின்றனா்.

மேலும் வரும் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதால் இப்பகுதியில் நோய் தொற்று அபாயம் இருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே விரைந்து சாலை அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →