அரிசிக் கடை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி
பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்து திருப்பி செலுத்த முடியாததால் அரிசிக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
ராமநாதபுரம்அரிசிக் கடை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி
பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்து திருப்பி செலுத்த முடியாததால் அரிசிக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்து திருப்பி செலுத்த முடியாததால் அரிசிக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
பரமக்குடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் பிரசன்னா (30). இவா் அப்பகுதியில் அரிசிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சிபாரிசின் பேரில் நண்பா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா்.
கடன் வாங்கிய நண்பா் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவா் பிரசன்னாவிடம் கடனைக் கேட்டு தொல்லை கொடுத்தாராம்.
இதனால் மனமுடைந்த பிரசன்னா ஞாயிற்றுக்கிழமை மாலை காக்காத்தோப்பு பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். அப்போது தண்ணீரில் விழுந்து உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றாா். பின்னா் செல்லிடப்பேசி மூலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் தீக்காயங்களுடன் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக பிரசன்னா மதுரை கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.