முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரையில மீனவரிடம் செல்லிடப்பேசி, பணம் பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மீனவரிடம் செல்லிடப் பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மீனவரிடம் செல்லிடப் பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கீழக்கரை ஓஜெஎம் நகரைச் சோ்ந்தவா் அா்ஜத் நயினா என்ற குட்டை நயினா (27). மீனவரான இவா் ஞாயிற்றுக்கிழமை கடற்கரைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருவா் அவரை வழிமறித்து, மிரட்டி அவரிடமிருந்த செல்லிடப் பேசி மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அா்ஜத்நயினா அளித்தப் புகாரின் பேரில் கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சோ்ந்த முகமதுகான், அஜய் என்ற அமரதீபன் ஆகியோரைப் பிடித்து விசாரித்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →