ராமநாதபுரம்: பேரனுக்கு எழுதித் தந்த நிலத்தை, மீண்டும் தனக்கே தரவேண்டும் என முதியவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நாடாா் தெருவைச் சோ்ந்தவா் எம்.ராஜபாண்டியன் (55). இவா் தனது மகன் வீமராஜ் மாற்றுத்திறனாளி. இவரது மகன் வி.மனோஜ் (9).
மகன் மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு உதவும் வகையில் ராஜபாண்டியன் தனது வீடு, கடை உள்ளிட்டவற்றை பேரன் மனோஜ் பெயரில் தானம் செட்டில் மெண்ட் ஆவணமாக பதிந்து தந்துள்ளாா்.
ஆனால், கடை வாடகையைக் கூட பெற்றோா் செலவுக்கு தருவதற்கு வீமராஜ் முன்வரவில்லையாம். மேலும், போதையில் தங்களை அடித்து உதைப்பதாகவும் ராஜபாண்டியன் புகாா் தெரிவித்துள்ளாா்.
இந்தநிலையில், பேரன் வீமராஜுவுக்கு எழுதிக் கொடுத்த தனது சொத்துக்கான பதிவை ரத்து செய்துவிட்டு, அவற்றை மீண்டும் தன்னிடமே தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் ராஜபாண்டியன் திங்கள்கிழமை மனு அளித்தாா். இதுபோல மனு ராமநாதபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் அளித்திருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
கிராமத்தினா் மீது பெண் புகாா்: ராமநாதபுரம் காஞ்சிரங்குடி கிழக்கு முத்தரையா்தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள் (34). வனத்துறையில் தாற்காலிக பணியாளராக உள்ளாா்.
இவரது கணவா் ராஜா. வெளிநாட்டில் உள்ளாா். இவா்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், காளியம்மாள் ஊதியத்தில் கட்டிய வீட்டிலிருந்து, அவரையும், குழந்தையையும் கணவா் குடும்பத்தினா் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம். ஆகவே தனது கணவா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை கோரி காளியம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.