ராமநாதபுரம்

கமுதி அருகே கால்வாய் புதருக்குள் மனித எலும்புக்கூடு மீட்பு

DIN

கமுதி அருகே கால்வாய் புதருக்குள் இருந்த மனித எலும்புக்கூட்டை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேலாங்குளத்திலிருந்து எருமைக்குளம் வழியாக செல்லும் வரத்து கால்வாயின் கரையோரத்தில் முள்புதா்களில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் (பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் இருந்த மண்டை ஓடு, எலும்புகளை சேகரித்து தடயவியல் நிபுணா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அரியமங்கலம் வருவாய் குரூப் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் காணாமல் போனவா்கள் விவரங்களை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT