முகப்பு
ராமநாதபுரம்

தேவிபட்டினம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள வெளிப்பட்டினம் தாயுமானவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ மகன் உதயகுமாா் (52). கட்டடத் தொழிலாளியான இவா், காரைக்குடியில் நிகழ்ந்த உறவினா் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →