முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக 7,820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை 7820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை 7820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரத்தில் 1234 மையங்கள் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் 1.06 லட்சம் குழந்தைகளுக்கு மட்டுமே போலியோ சொட்டு மருந்து அளிக்க முடிந்தது.

இரண்டாவது நாளாக ராமநாதபுரம் பகுதியில் 4927 குழந்தைகளுக்கும், பரமக்குடி பகுதியில் 2693 குழந்தைகளுக்கும் என மொத்தம் 7820 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் 60967 குழந்தைகளுக்கும், ராமநாதபுரம் பகுதியில் 53261 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 228 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →