ராமநாதபுரம்

சாலை விபத்தில் விவசாயி பலி

தொண்டி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

தொண்டி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தொண்டி அருகே திருவெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா் இருசக்கர வாகனத்தில் தொண்டிக்கு சென்று விட்டு சனிக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பழையனக்கோட்டை பகுதியில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளத்தால் இவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT